Saturday 18th of May 2024 03:30:40 AM GMT

LANGUAGE - TAMIL
.
TNAகிழக்கு மாகாணசபையை கைப்பற்றும்போது சுற்றுலாத்துறையினை மேம்படுத்த நடவடிக்கை!

TNAகிழக்கு மாகாணசபையை கைப்பற்றும்போது சுற்றுலாத்துறையினை மேம்படுத்த நடவடிக்கை!


தமிழ் தேசிய கூட்டமைப்பு கிழக்கு மாகாணசபையின் ஆட்சி அதிகாரத்தினை கைப்பற்றும்போது சுற்றுலாத்துறையினை மேம்படுத்த நடவடிக்கையெடுக்கும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் இணைப்புச்செயலாளரும் இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் முகாமையாளருமான மதிமேனன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஓந்தாச்சிமடம் ஸ்ரீ விநாயகர் மகா வித்தியாலயத்திற்கான உபகரணங்கள் இன்று வழங்கிவைக்கப்பட்டன.

ஓந்தாச்சிமடம் ஸ்ரீ விநாயகர் மகா வித்தியாலயத்தில் உயர்தரப்பரிவு மாணவர்களுக்கான மனைப்பொருளியல் பாடநெறிக்கான பயிற்சிக்கான உபரகரணங்களே இவ்வாறு வழங்கிவைக்கப்பட்டன.

இவற்றினை வழங்கிவைக்கும் நிகழ்வு இன்று பாடசாலையின் அதிபர் திருமதி மதிவதனி பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் இணைப்புச்செயலாளரும் இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் முகாமையாளருமான மதிமேனன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE